Skip to main content

சீர்காழியில் வாக்கு சீட்டுகளை மாற்றிய மர்ம நபர்கள்; அதிமுக பிரமுகரின் கைவரிசை என வேட்பாளர்கள் வேதனை

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்து 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இரண்டாம்கட்ட தேர்தல் வரும் 3 0ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் நடந்து முடிந்த சீர்காழி ஒன்றியத்திற்கான வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குப்பெட்டிகள் சீர்காழியில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வானகிரிகுப்பம், காவிரிபூம்பட்டினம், திருவாலி,சண்ணாப்பட்டினம் உள்ளிட்ட 13 ஊராட்சிகளின் வாக்குப் பெட்டிகளை உடைத்து அதிலுள்ள வாக்குச்சீட்டுகள் மாற்றியிருக்கின்றனர். அப்படிபட்ட கைவைரிசையில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் உள்ளே மாட்டிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், " விசாரித்துக் கொண்டிருக்கிறோம் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் ஒவ்வொரு பெட்டியாக வைக்கப்பட்ட சீலை பிரித்து சீட்டுகளை மாற்றி இருக்கின்றனர். இது வெளியில் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. நான்கு பேர் தப்பி விட்டனர், இரண்டு பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த கைவரிசையை  அதிமுக ஒன்றிய பிரமுகர் ஒருவரால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடுவோம்," என்றார்.

போராட்டத்தில் உள்ளவர்களோ, "ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. எந்த தேர்தலும் கண்டிராத வகையில் உள்ளாட்சித் தேர்தலில் பண பரிவர்த்தனையும், பொருள் பரிவர்த்தனையும் ஜரூராக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக உள்ளாட்சியில் ஊராட்சி உறுப்பினருக்கும், ஊராட்சித் தலைவருக்கும் போட்டியிடுபவர் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரை செலவு செய்வார்கள். ஆனால் இந்த தேர்தலில் அதிகபட்சமாக 20 லட்சம் வரையும், குறைந்தபட்சம் பத்து லட்சம் வரையும் செய்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் குத்துவிளக்கு முதல் பொங்கல் சீர்வரிசை வரை கொடுத்து வாக்கு சேகரித்துள்ளனர்.  சட்டமன்ற தேர்தலை தாண்டி வாக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஊராட்சிகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களையும்,வேட்பாளர்களையும் நிலைகுலையவே வைத்துள்ளது". என்கிறார்கள்.

இதனை அறிந்த போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்த கல்விக்குழுமத்தின் வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் முழுவதும் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பரபரப்பை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போகுமிடமெல்லாம் ஆளுநருக்கு கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
A black flag for the governor wherever he goes; Police build up

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.