Skip to main content

பிறந்த குழந்தையோடு காதலன் வீட்டுவாசலில் தர்ணாவில் மாற்றுத்திறனாளி பெண்; நாகை மாவட்டத்தில் பரபரப்பு

Published on 27/11/2019 | Edited on 27/11/2019


பிறந்த குழந்தையோடு மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன் வீட்டு முன்பு  குழந்தையோடு பாதிக்கபட்ட பெண்ணும் அவருக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

incident in nagai

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வீரபெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தீனா. மாற்று திறனாளி பெண்ணான இவர் அதேபகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஆண்டு தீனா கர்ப்பமானார். இதனை மருத்துவ பரிசோதனையில் தெரிந்துகொண்ட தீனாவின் பெற்றோர்கள் ஐயப்பனின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்ள முறையிட்டுள்ளனர்.

 

incident in nagai


ஆனால் தீனாவை திருமணம் செய்துகொள்ள ஐயப்பன் மறுக்கவே, அவர் மீது நாகை அனைத்து மகளிர் காவல்நிலையம், நாகை டி.எஸ்.பி, நாகை எஸ்.பி அலுவலகம், உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த பிரச்சனையை கடந்த 10 மாதங்களாக நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரையிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கிடையில் தீனா பிரசவித்தார், 18 நாட்கள் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பாதிக்கபட்ட பெண்ணான தீனா பெற்ற குழந்தையுடன் காதலனான ஐய்யப்பன் வீட்டு வாசலில் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

incident in nagai


"ஐயப்பனின் உறவினர்கள் 3 பேர் காவல் துறையில் பணிபுரிவதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று கூறுகிறார் பாதிக்கபட்ட பெண்ணான தீனா.

 

incident in nagai

 

"இருவரும் வெவ்வேறு சாதியை செரந்தவர்கள் என்பதாலும், மாற்று திறனாளி என்பதாலும் ஐயப்பன், தீணாவை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவாக இருக்கும் ஐயப்பன் மற்றும் அவரது பெற்றோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும்," என்கிறார்கள் கூடியிருந்த கிராம மக்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .