Skip to main content

மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு! 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
incident in mecherry lake

 

 

மேச்சேரி அருகே, பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் ஏரியில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள புக்கம்பட்டியில் நாகிரெட்டிப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேச்சேரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரி, ஏற்கனவே குடிமராமத்து செய்யப்பட்டுள்ளதால் ஏரியின் உட்பகுதியில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளது.

 

இந்நிலையில், ஆக. 11ம் தேதி, புக்கம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன்கள் ஹரீஷ் (17), ரித்தீஷ் (16) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் அகுல் என்கிற தர்ஷன் (15) ஆகிய மூன்று பேரும் நாகிரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்க சென்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு ஏரியில் நீர் தேங்கியுள்ளதால் அவர்கள் குதூலகமாக குதித்து மகிழ்ந்தனர். திடீரென்று அவர்கள் ஏரியின் ஒரு பகுதியில் சேற்றில் சிக்கிக்கொண்டு கரைக்கு வர முடியாமல் திணறினர். உயிருக்கு போராடிய அவர்கள் காப்பாற்றுமாறு கத்தி கூச்சல் போட்டனர்.

 

சிறுவர்களின் அபயக்குரலைக் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள், கிராம மக்கள் சிலரும் ஏரியில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் நீரில் மூழ்கினர். அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தபோது, மூன்று பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

 

lake

 

 

இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

உயிரிழந்தவர்களில் ஹரீஷ் 10ம் வகுப்பும், ரித்தீஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் 9ம் வகுப்பும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏரிகள், குவாரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரியவர்களின் துணையின்றி நீச்சல் தெரியாத சிறுவர்கள் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.