Skip to main content

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; காரணமான ஐந்து பேர் கைது... மயிலாடுதுறை அவலம்!!

Published on 25/07/2020 | Edited on 26/07/2020
incident in mayilaudurai

 

 

குடிபோதைக்கு அடிமையான தாய் ஒருவரின் ஆதரவை சாதகமாக்கிக்கொண்ட காமுகர்கள், 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து குழந்தையோடு தவிக்கவிட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமுக பணியாளர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியின் தாய் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள ஒரு வரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மாரியம்மாள், தூய்மை பணியாளர்களான இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். அதில் ஒரு பெண்ணை மயிலாடுதுறையிலும், இரண்டாவது பெண்ணை வைத்தீஸ்வரன் கோயிலிலும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது பெண் மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.

 

இந்தநிலையில் மாரியம்மாளுக்கு இருந்த குடிப்பழக்கத்தாலும், தகாத உறவுகளாலும் மனமுடைந்த கலியபெருமாள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டார். வரதம்பட்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக இருந்த மாரியம்மாள், அவரது மகளோடு அங்குள்ள வாட்டர் டேங்க் ஆப்ரேட் ரூமில் குடியிருந்தனர். இந்த சூழலின் மாரியம்மாள் பணத்திற்காக அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு பலவந்தமாக இறையாக்கியிருக்கிறார். அதில் கருவுற்ற அந்த சிறுமியின் கருவை கலைக்க அந்த பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் கருவை கலைக்கமுடியாது, குழந்தையாகிவிட்டது என மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், நீடூர் என்கிற ஊரில் தனியாக குடிவைத்தனர்.

 

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு பிரசவலி எடுக்க மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கு தாலி சர்ச்சை ஏற்படும் என்பதால் மாரியம்மாளே அந்த சிறுமியின் கழுத்தில்  மஞ்சல் கயிற்றை கட்டி, இரண்டாவது மகளின் கணவன் தினேஷ்தான் கணவன் என மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அந்த சிறுமியின் தோற்றத்தை வைத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் சமுகநல அதிகாரிகளுக்கு தகவலை கூறிவிட்டு, பிரசவம் பார்த்தனர். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த சிறுமியிடம் விசாரித்த சமுக நல அலுவலர்கள் தவறு நடந்துள்ளதை கண்டறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பெயரில், அந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீது குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழும், அந்த சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ், மணல்மேட்டை சேர்ந்த 72 வயதான ராதாகிருஷ்ணன், திருவாளப்புத்தூரை சேர்ந்த 45 வயதுடைய செந்தில்குமார், கடலங்குடி சேர்ந்த ராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

"தினேஷை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். அந்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் பல பெரும்புள்ளிகள் இருக்கின்றனர். அவர்களை காவல்துறையினர் திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் ஊரறிந்த விஷயம், அதனால் யார் யார் குற்றவாளிகள் என்பது எங்க கிராமத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு தெரியும். உண்மையான குற்றவாளிகள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.