ADVERTISEMENT

டிக் டாக்கில் மூழ்கியிருந்த 16 வயது சிறுமி கடத்தல்... போக்ஸோவில் ஒருவர் கைது!! 

02:13 PM Aug 13, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில் மூழ்கியிருந்த 16 வயது சிறுமி இளைஞர் ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமி டிக் டாக் செல்போன் ஆப்-ல் பாடுவது, நடனம் ஆடுவது என அதிலேயே மூழ்கி இருந்த நிலையில், கடந்த ஆறாம் தேதி அச் சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் சிறுமி காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. அந்த சிறுமியுடன் ஏற்கனவே டிக் டாக்கில் பழகி இருந்த சஞ்சய்குமார், தனது நண்பர்களின் உதவியுடன் 16 வயது சிறுமியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கடத்தி செல்லப்பட்ட சிறுமியை மீட்ட காவல்துறையினர், சஞ்சய்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததோடு சஞ்சய்குமார் சிறுமியை கடத்த உதவிய நபர்களை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT