Skip to main content

புகாரில் கைது நடவடிக்கை எடுக்காத போலீசார்... 17 வயது சிறுமி தற்கொலை!!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
INCIDENT IN MANAPARAI

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு 17 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி சமீபத்தில் கர்ப்பம் தரித்த நிலையில், அவரது பெற்றோர் விசாரித்தபோது சிறுமியின் உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், நம்பம்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கி வயது 22 என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் சிறுமி 6 மாத கர்ப்பிணியானார். இந்நிலையில் ராம்கியின் குடும்பத்தினரிடம் சிறுமியின் குடும்பத்தினர் சென்று கேட்டபோது தரக்குறைவாக பேசி அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதனால் வேதனை அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இதுதொடர்பாக கடந்த மே மாதம் 29 ம் தேதி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ராம்கி மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ராம்கியை கைது செய்யவில்லை. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணப்பாறை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ராம்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராம்கி கைது செய்யப்படவில்லை. இதையடுத்துதான் கடந்த 6 ம் தேதி சிறுமி தன்னுடைய பெற்றோருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது. அப்போதும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

INCIDENT IN MANAPARAI


இந்நிலையில்தான் மிகுந்த மனவேதனைக்கு ஆளான சிறுமி, இன்று வீட்டில் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி.ஜெயராம், டி.ஜ.ஜி.ஆனி விஜயா, எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் லெட்சுமியின் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை தற்கொலைக்கு தூண்டியதாக வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராம்கி மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/health-minister-interview-ready-leave-politics

 

இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி.ஜெயராம் கூறுகையில், 

“சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றசம்பவங்களை தடுத்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது, கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.