Skip to main content

பழிக்குப் பழியாக விரட்டி வெட்டப்பட்ட ரவுடி... சுட்டுக் காப்பாற்றிய வங்கி செக்யூரிட்டி..!!!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே சாவு என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக, பழிக்குப் பழியாக கொலை சம்பவங்கள் தமிழகமெங்கும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ரவுடி ஒருவரை பழிதீர்க்க ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட நிலையில், வங்கி ஒன்றின் பாதுகாவலரால் விரட்டிய ரவுடிகள் சுடப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார் வெட்டுப்பட்ட ரவுடி.

 

manamadurai


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ். காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ள இவர் இன்று மானாமதுரை பஜார் சாலையில் நண்பர் ஒருவருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, மூன்று இருசக்கர வாகனங்களில் பிச்சை பிள்ளையனேந்தல் தமிழ்செல்வம், ஆவரங்காட்டை சேர்ந்த ஆண்டிசெல்வம், பூமிபாலன் மற்றும் சலுப்பன ஓடை மச்சக்காளை உள்ளிட்டோருடன் ஏழு பேர் கொண்ட குழு வாகனத்தை நிறுத்தி சராமரியாக வெட்டத் தொடங்கியது. இதில் தங்கராஜின் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மாறாக உடலெங்கும் வெட்டுப்பட்ட நிலையில்,  உடன் வந்த நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கி அருகில் முதல் தளத்தில் இயங்கி வந்த கனரா வங்கிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். தங்கராஜை துரத்தி சென்ற தமிழ்செல்வம் தலைமையிலான குழு வங்கியினுள்ளே சென்று வெட்டத் தொடங்கியிருக்கின்றது. அங்கிருந்த வங்கி செக்யூரிட்டி செல்வ நேரு எச்சரித்தும் கேளாததால் தமிழ்செல்வத்தின் காலை நோக்கி சுட்டுக் காயப்படுத்த அனைவரும் தப்பியோடியுள்ளனர். இதில் காயமடைந்த ரவுடி தமிழ்செல்வம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தங்கராஜோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

manamadurai


 "ஒப்பந்ததாரராகவும், அமமுக மானாமதுரை மேற்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வந்தவர் சரவணன். இவர் கடந்த மே 26-ஆம் தேதி காலை மானாமதுரை புறவழிச்சாலையில் நடைபயிற்சி சென்ற நிலையில் சரவணனை வெட்டிக்கொன்றனர் சிலர். இந்தக் கொலையில் தங்கராஜ் தலையிட்டிருக்கலாம் என அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்பொழுது செயல்பட்டிருக்கின்றது தமிழ்ச்செல்வம் தலைமையிலான டீம்." என மானாமதுரை டி.எஸ்.பி.தலைமையிலான போலீஸ் டீம் குற்றவாளிகளை தேடி வருகின்றது. பட்டப்பகலிலே நடந்துள்ள இச்சம்பவத்தால் மானாமதுரையில் பதற்றம் தொற்றியுள்ளது.

 

 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.