Advertisment

சாணிபவுடர் ஊற்றி கழுத்தை நெரித்து காதலி கொலை;காதலன் கைது 

கோவை அடுத்த கீரணநத்தம் கல்லக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் ராமாத்தாள் தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

Advertisment

இவர்களுக்கு பிருந்தா( பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற மகளும்,ஒரு மகனும் இருக்கிற நிலையில்பிருந்தா கோவை அரசு கலைக்கல்லூரியல் இறுதியாண்டு பயின்று வந்தார். பிருந்தாவும் கணபதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் இருவரும் பள்ளி பருவத்திருந்து காதலித்து வந்தனர்.

Advertisment

இவர்கள் காதலை அறிந்தபிருந்தாவின்தாய் ராமாத்தாள் இருவரின் திருமணத்திற்கு சிலமாதங்களுக்கு முன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் பிருந்தாவோகல்லூரி படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் என கூறினார்.

incident in kovai.... police arrest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஏன் என்றால்கடந்த சில மாதங்களாக தினேஷின் நடவடிக்கையில சந்தேகம் அடைந்திருக்கிறார்பிருந்தாஅதனால் தினேசுடன் பேச மறுத்ததுடன் திருமணம் செய்ய மறுத்தார்பிருந்தா.

இதனால் ஆத்தி்ரத்திலிருந்த தினேஷ் நேற்று மாலை வீட்டில், பிருந்தாவின்பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த தினேஷ்பிருந்தாவைசரமாரியாக தாக்கி அவரது கழுத்தை நெரித்ததுடன் அவரது வாயில் சாணிப்பவுடரை ஊற்றிவிட்டுஅங்கிருந்து தப்பினார்.

இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், பிருந்தாதரையில் உடலில் காயங்களுடன் மயக்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பிருந்தாவைமீட்ட அவளது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பிருந்தாஇன்று பரிதாபமாக உயிரிழந்தார் இதனிடையே தப்பி ஓடிய தினேஷ் அவரது பாட்டி வீட்டில் தானும் சாணிப்பவுடர் அருந்தி தற்கொலை முயற்சி செய்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தினேஷ் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் தினேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident kovai murder police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe