Skip to main content

அதே இடத்தில் மீண்டும் 'தீண்டாமை சுவரா?' - நெஞ்சை உலுக்கிய சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுநாள்!!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

incident in kovai mettupalayam  Memorial Day

 

கடந்த ஆண்டு இதேநாள் கோவை, மேட்டுப்பாளையம் நடுவூரில் ஆதிதிராவிடர் காலனியில் பெய்த கனமழையில், வீட்டின் மிகப்பெரிய சுற்றுச்சுவர் இடிந்து, ஒட்டியிருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கியது இந்தச் சம்பவம்.

 

incident in kovai mettupalayam  Memorial Day

 

இடிந்து விழுந்தது 'தீண்டாமை சுவர்' என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லினர். அந்த நேரத்தில் பெற்றோர்களை இழந்த சிறுமி ஒருவர் ''எங்களுடைய அப்பா இந்த விபத்தில் இறந்துவிட்டார். எங்களுடைய புத்தகங்களும் விபத்தில் சிக்கிவிட்டது. எங்களுக்குப் படிக்க ஏற்பாடு செய்தால், எப்படியாவது படிச்சு என் அம்மாவ காப்பாத்திப்புடுவேன்'' எனக் கண்ணீர் மல்க கூறியது அனைவர் மனதையும் நனைத்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது.

 

incident in kovai mettupalayam  Memorial Day

 

இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த 17 பேரின் முதல் நினைவுநாள் இன்று அங்கு அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் காலனி பகுதிக்குள் நுழைய தடைவிதித்திருந்ததால், தனித் தனிக் குழுவாகச் சென்ற அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும், சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் மீண்டும் சுவர் எழுப்பப் பட்டுள்ளதை எதிர்த்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100 -க்கும் மேற்பட்டோர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். அதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

      

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.