Skip to main content

தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

கிருஷ்ணகிரி அருகே, தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த வேன் ஓட்டுநரை பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). வேன் ஓட்டுநர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலை, அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சடலமாகக் கிடந்தார்.

 

incident in kirushnakiri;Three arrested, including a former soldier

 

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மாரித்துவுக்கும், கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தீர்த்தச் செல்வன் (55) என்பவரின் மனைவி ஈஸ்வரி (37) என்பவருக்கும் இடையே 'தவறான தொடர்பு' இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'நெருக்கமாக' இருந்துள்ளனர்.

இதையறிந்த தீர்த்தச்செல்வன், தனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனாலும், ஈஸ்வரியை அடிக்கடி மாரிமுத்து சந்தித்து வந்துள்ளார்.

இதுபற்றி தீர்த்தச்செல்வன், தாளாப்பள்ளியைச் சேர்ந்த தனது நண்பரும், கட்டடத் தொழிலாளியுமான கோவிந்தராஜ் (35) என்பவரிடம் கூறியுள்ளார். தனது மனைவியுடன் மாரிமுத்து தவறான தொடர்பு வைத்திருப்பதால் ஊரில் தலைகாட்ட முடியவில்லை என்று புலம்பியதுடன், அவரை தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதி அடைவேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

 

asdsd

 


இதையடுத்து, மாரிமுத்துவை கொலை செய்ய கோவிந்தராஜ் திட்டம் தீட்டியுள்ளார். ஜனவரி 16ம் தேதி, கேசவன் (27) என்பவர் மூலம் மாரிமுத்துவை ஏரிக்கரை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கே மாரிமுத்து, அவருடைய மாமா எல்லப்பன், நண்பர் ராஜ்குமார், கேசவன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த இடத்திற்குச் சென்ற கோவிந்தராஜ், தீர்த்தச்செல்வனின் மனைவியுடனான தொடர்பை விட்டுவிட்டு இந்த ஊரை விட்டு ஓடாவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இருவரையும் மாரிமுத்துவின் உடன் இருந்தவர்கள் சமாதானப்படுத்திவிட்டு, மாரிமுத்துவை மட்டும் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனாலும், நண்பனின் மன நிம்மதிக்காக மாரிமுத்துவைக் கொல்ல திட்டமிட்டிருந்த கோவிந்தராஜ், கீழே கிடந்த பாறாங்கல்லை எடுத்து மாரிமுத்துவின் தலைமீது போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் தீர்த்தச்செல்வன், கட்டடத் தொழிலாளி கோவிந்தராஜ், அவர்களுடைய கூட்டாளி கேசவன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜன. 17) இரவு கைது செய்தனர். மூவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.