Skip to main content

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிந்ததோ அறநிலையத்துறை?

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

incident in kanjipuram

 

அதிக கோவில்களைக் கொண்ட காஞ்சிபுரத்தில் கோவில் சிற்ப வேலைப்பாடுகள் எழில் நிறைந்தவையாக இருக்கும். 2019-ஆம் ஆண்டு (40 ஆண்டுகளுக்கு ஒரு முறை) உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் தரிசனமும் காஞ்சிபுரத்தின் முக்கிய கோவில் வழிபாட்டு நிகழ்வில் ஒன்று. அப்படிப்பட்ட காஞ்சியில், சாக்கடை வெளியேற்றும் கால்வாயில், கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

incident in kanjipuram

 

காஞ்சிபுரம் பெருநகராட்சி வார்டு எண் 22 -க்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையத்தின் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயின் கரையோரத்தில், சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கல் தூண்கள் கரை போன்று அடுக்கப்பட்டுள்ளது. அடுக்கப்பட்டுள்ள இந்த கல் தூண்கள் எந்த கோவிலைச் சேர்ந்தவை எனத் தெரியவில்லை எனக் கூறும் பொதுமக்கள் இவை ஏகாம்பரநாதர் கோவில் தூண்களாகக் கூட இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமல்லாது முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை புகார்களை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

 

incident in kanjipuram

 

சாக்கடை கால்வாயின் கரையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அந்தத் தூண்களில் சிவன் உட்பட பல தெய்வங்களின் உருவங்கள் இடப்பெற்றுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வரலாற்று பொக்கிஷமாகப் பேணி காக்கவேண்டிய தூண்கள் இப்படி கால்வாயில் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையைத் தருகிறது. எனவே கண்டிப்பாக இந்தத் தூண்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும், அதை உரிய இடத்தில் கொண்டுசேர்த்துப் பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

'நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் பாடல் நாம் அறிந்ததுதான். 

 

இப்படி வரலாற்றுப் பொக்கிஷத்தைப் புழுதியில் விட்டெறிந்துவிட்டதோ அறநிலையத்துறை என்ற கேள்வி எழுவதை தடுக்கமுடியவில்ல...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.