incident in kaniyakumari

Advertisment

ஆன்லைன் 'பப்ஜி' கேம்மூலம்மலர்ந்த காதல்,திருமணத்தில் முடிந்துள்ள நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரைச் சேர்ந்தஅஜன் பிரின்ஸ்என்ற இளைஞருக்கும்கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள ஆசாரிபெற்றுவிளையைச் சேர்ந்தபப்பிஷாஎன்ற பெண்ணுக்கும்பப்ஜி கேம் விளையாடும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது.காலப் போக்கில்பழக்கம்காதலாக மாறஇருவரும்திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பப்பிஷா வீட்டை விட்டு கடந்த 19 ஆம் தேதி வெளியேறினார்.

தனது மகளைக் காணவில்லை என பப்பிஷாவின் பெற்றோர்கள் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் 26 ஆம் தேதி காதல் ஜோடி இருவரும்திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இவர்களது காதலுக்கு இளைஞரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.