Skip to main content

பட்டப்பகலில் கடைவீதியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் கைது!

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

incident in kallakurichy

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணலூர்பேட்டை. இங்குள்ள பேக்கரி கடையில் வேலை செய்த மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வயது 45 இவரது மனைவி விஜயா வயது 37 இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று வீட்டு வேலை செய்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளார். இதன் பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

kallakurichi

 

மனைவி விஜயா மீது சரவணன் சந்தேகமடைந்துள்ளார் எனவே இருவருக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட இதனால் இருவரும் பிரிந்து  தனித்தனியாக வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு விஜயா தன் தாயாருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மணலூர்பேட்டையில் உள்ள  ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

 

இந்த நிலையில் சரவணன் அடிக்கடி வந்து மனைவி விஜயாவை சேர்ந்து வாழ்வதற்கு தன்னோடு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் கணவருடன் செல்ல விஜயா மறுத்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் நேற்று முன்தினம் மணலூர்பேட்டையில் விஜயா வேலைசெய்த பேக்கரி கடைக்குச் சென்று தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். அப்போதும் விஜயா மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன் கையில் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துள்ளார்.

 

incident in kallakurichy


இதனைப் பார்த்த பொதுமக்கள் பயந்து மிரண்டு ஓடியுள்ளனர். தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய  விஜயாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் தானே உளுந்தூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எனது மனைவி விஜயா  வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிறகு அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில் சேர்ந்து வாழ வருமாறு விஜயாவை அழைத்தபோது வர முடியாது என்று மறுத்து வந்தார். இந்த கோபத்தினால் அவரை கத்தியால் குத்தினேன் என்று சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதையடுத்து  போலீசார் சரவணனை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு நீதிமன்றம் மூலம் அவரை சிறையில் அடைத்துள்ளனர். விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்தச் சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.