Skip to main content

மழை, கடும் குளிர் தாங்காமல் 600 ஆடுகள் உயிரிழப்பு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

incident in kallakurichi sangarapuram

சமீப நாட்களாக பெய்துவரும் தொடர் மழை ஒரு பக்கம். அதேபோல் மழை இல்லாத நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஒருபக்கம். கடும் குளிர் மனிதர்களையும் அவர்கள் வளர்க்கும் ஆடு மாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள பாவலம் கிராமத்தில் 600 ஆடுகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி கருத்த பிள்ளை. இவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆடுகள் வளர்ப்புத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களின் போது ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்வது வழக்கம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார்கள். இதற்காகவே வெயில், மழை பாராமல் காடு மேடெல்லாம் திரிந்து ஆடுகளை மேய்த்து வளர்த்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் (08/01/2021) பாவலம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தங்களது சுமார் 600 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தனர். சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (08/01/2021) பெய்த பலத்த மழையின் காரணமாக முசுகுந்த ஆற்றின் கரை ஓரப்பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ள நீரில் அடித்துச் சென்றன. மீதி இருந்த சுமார் 500 ஆண்டுகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்தன. நேற்று காலையில் சென்று ஆடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதன் உரிமையாளர் பழனி கருத்த பிள்ளை கதறி அழுதார். இந்தத் தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.

 

அதேபோல், இதை அறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு ஆடுகளை வளர்த்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அதிகாரிகளிடம் அவர்களுக்கான உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.