Skip to main content

கர்ப்பிணிப் பெண் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

INCIDENT IN KALLAKURICHI

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ளது கீழாத்துக்குழி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகன் ஈஸ்வரன் (30). இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியுள்ளார். இந்தத் தம்பதிக்கு, 5 வயதில் புஷ்பா, 2 வயது யமுனா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ரேவதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஈஸ்வரனின் அண்ணன் மகேந்திரன், அவரின் மனைவி அலமேலு. இவர்களுக்கு, கதிரேசன், கேசவர்த்தினி என இரு பிள்ளைகள் உள்ளனர். மகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் கும்பலுடன் செல்லும்போது நடந்த கார் விபத்து தீயில் கருகி பலியாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவரது மனைவி அலமேலுவை ஈஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் ஒன்று கூடி ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ரேவதி நேற்று முன்தினம் மாலை, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலை வரை அவரும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் ரேவதியும் குழந்தைகளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே ரேவதியின் செருப்பு கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே கிணற்றில் இறங்கித் தேடியுள்ளனர். அந்தக் கிணற்றில் ரேவதி, புஷ்பா, யமுனா ஆகிய மூவரின் உடல்களும் கிடந்துள்ளன. மூன்று உடல்நிலையும் உடனடியாக வெளியே கொண்டு வந்தனர்.

 

cnc

 

இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்துபோன மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறந்து போன சம்பவம் கல்வராயன் மலைப் பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.