ADVERTISEMENT

இ-பாஸ் வாங்கித் தருவதாக 25 ஆயிரம் ரூபாய் மோசடி!!! -இருவர் கைது

05:23 PM Jun 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் வாங்கி மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

ADVERTISEMENT


இந்நிலையில் திருவள்ளூரில் இ-பாஸ் வாங்கி தருவதாக ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரில் திருப்பதி செல்ல இ-பாஸ் வாங்கி தருவதாகக்கூறி சதீஷ் குமார் என்பவரிடம் 25 ஆயிரம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இ-பாஸ் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ஜெகதீஷ், தினேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT