கல்லூரி பேருந்தை வழிமறித்து ரகளை... போதை இளைஞர்கள் மீது வழக்கு!

incident in ilaiyangudi

சிவகங்கையில் தனியார் கல்லூரி பேருந்தைநிறுத்தி குடிபோதையில் ரகளை செய்த இளைஞர்களைப் போலீசார்தேடிவருகின்றனர்.

கரோனாகட்டுப்பாடுகளுக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள் படிப்படியான தளர்வுகளுக்கிடையேதிறக்கப்பட்டுவருகின்றன. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால்கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மோதல் போக்கிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோநடந்துகொள்ளலாம்எனபோலீசார்தீவீரகண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (14.10.2021) ஆவடி ரயில் நிலையத்தில் புத்தகப்பையில் கற்களை எடுத்துச்சென்ற மாணவன் ரயில்வேபோலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதேபோல் சென்னையில் பல பகுதிகளில் 'ரூட்டுதல' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள்மோதிக்கொள்ளும் போக்கு தற்போதுவரை நடைபெறுகிறது.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="126be9f9-222a-4546-b368-c0251aaafdb2" height="308" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_101.jpg" width="513" />

இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறங்களிலும் இதேபோன்ற செயல்கள் நடைபெற்று அதுதொடர்பானவீடியோக்கள்அனுதினமும்சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில், சிவகங்கை மாவட்டம்இளையான்குடிபகுதியில் உள்ள குமாரக்குறிச்சிஎன்ற கிராமத்தில் சாலையில் சென்ற தனியார் கலைக்கல்லூரிப் பேருந்தை வழிமறித்தபோதை இளைஞர்கள் சிலர், மதுபாட்டிலைபேருந்தின் முன் வைத்து நடனமாடி இடையூறு செய்யும் காட்சி சமூக வலைதளங்களில்வைரலானது.இது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்இளையான்குடி போலீசார்.

police sivakangai social media video
இதையும் படியுங்கள்
Subscribe