Skip to main content

சிறப்பு உதவி ஆய்வாளரின் தொடர் தகாத உறவால் ஏற்பட்ட அசம்பாவிதம்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
the incident happens due to sub inspectors continous wrong relation

 

திருவண்ணாமலை மாவட்டம் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் 58 வயதான சுந்தர். இவருக்குத் திருமணமாகி மனைவி விவாகரத்து செய்துவிட்டுப்போனதால், தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத்தெருவில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்துவருகிறார். திருவண்ணாமலை காஞ்சி சாலையில் வசித்துவரும் சுமதி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தரின் மகன்களைப் பராமரிக்க வீட்டு வேலைக்கு வந்துள்ளார். பின்னர் சுந்தர் மற்றும் சுமதி இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் குடும்பம் நடத்திவந்துள்ளனர். 

 

சுமதிக்கு நிறைய பணம் மற்றும் பொருட்கள் கொடுத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தருக்கும் காதலி சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுமதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னர், இருவரையும் அழைத்து சமாதானம் செய்ய, சுமதிக்கு உதவி ஆய்வாளர் சுந்தர் பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து அந்த தகாத உறவைத் துண்டித்துள்ளார். இந்நிலையில், சுந்தருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தற்போது கணவனை இழந்த லட்சுமி உதவி ஆய்வாளர் வீட்டிலேயே தங்கி மற்றொரு காதலியாக மாறியுள்ளார்.

 

இந்நிலையில், உதவி ஆய்வாளர் சுந்தர் ஏற்கனவே இருந்த பழைய காதலியான சுமதியின் பெயரில் மாருதி 800 கார் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்தக் காரினை புதிய காதலியான லட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததுடன் வீடு, இடம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழைய காதலி சுமதி, ஜூன் 19ஆம் தேதி இரவு 12 மணியளவில் சுந்தரின் மகன்கள் வீட்டில் இல்லாத நிலையில், சுந்தரம் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளக்காதலி சுமதி, தான் வாங்கி வந்த பெட்ரோலை உதவி ஆய்வாளரின் கார், பைக் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

 

இந்த தீ மளமளவென சுந்தரின் கார், பைக் பின்னர் அவரது படுக்கையறை முதல் மாடி, மேல் மாடி என பரவியது. தீ அணலில் படுக்கையில் இருந்த திடுக்கிட்டு எழுந்த உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயால் கார், பைக் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் சுந்தர் வீட்டின் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் காதலி சுமதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் பழைய காதலி சுமதியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தகாத காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, உதவி ஆய்வாளர் வீட்டில் முன்னாள் காதலி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.