Skip to main content

15 வயது சிறுவர்களுடன் நெருக்கம்... கொலையில் முடிந்த வாட்ஸ்அப் சாட்டிங்.... கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லுரி மாணவி ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

 The incident happened in Watts App chatting ...

 

கடந்த வியாழக்கிழமை உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது சித்தி பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மாணவி உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

 

இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலை என அவரது சித்தி கூறியுள்ள நிலையில், மாணவியை தேடி சென்றபோது அந்த கிணற்றிற்கு அருகில் இரண்டு போதை ஆசாமிகள் நின்றிருந்தாகவும் இது குறித்து கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

 

 The incident happened in Watts App chatting ...

 

 

இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாராய்வுக்கு வைக்கப்பட்டது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லாத நிலையில்  உடற்கூறாராய்வுக்கு பின்தான் இது கொலையா இல்லை தற்கொலையா என தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

 

 The incident happened in Watts App chatting ...

 

சம்பந்தப்பட்ட மாணவி எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பார் என்றும், வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் உரையாடுவது வழக்கம் என்றும் சம்பவத்தன்று வீட்டில் வாட்ஸ் அப்பில் நீண்ட நேரம் சாட்டிங் செய்துகொண்டிருந்தை அவரது சகோதரர் கண்டித்து திட்டியதால் வீட்டை விட்டு மாணவி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.  

 

 

இதனைத்தொடர்ந்து மாணவியின் செல்போனை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் உள்பட 5 பேரிடம் அதிக நேரம் வாட்சப் சாட்டிங்கில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். 

 

 The incident happened in Watts App chatting ...

 

அந்த செல்போனில் இருந்து பல செல்பி புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றி இந்த சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் சித்தி பிடித்து கொடுத்த ராஜி, வல்லரசு என்ற இரண்டு இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது கொலை என்ற அதிர்ச்சி வெளியானது.

 

அதே ஊரை சேர்ந்த ராஜி என்ற இளைஞன் மாணவியிடம் வாட்சப் சாட்டிங்கில் பேசி மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இடையில் அவன் கம்பி கட்டும் வேலைக்காக துபாய் சென்றுவிட மாணவி 15 வயது சிறுவர்கள் உட்பட 5 பேரிடம் நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஒரு மாதம் கழித்து ஊர் திரும்பிய ராஜியுடன் மீண்டும் காதல் துளிர்த்துள்ளது.

 

 The incident happened in Watts App chatting ...

 

இதனால் மீண்டும் பழையபடி நேரம்காலம் பார்க்காமல் வாட்சப் சாட்டிங்கில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது சிறுவனுடன் மாணவி மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ராஜி கையில் கிடைக்க அதை பெரிதுபடுத்தாதுபோல் பேசிவந்துள்ளான் ராஜி.

 

murder

 

சம்பவத்தன்று தனிமையில் சந்திக்கலாம் என்று மாணவி கூற இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜி சந்திக்க ஒத்துக்கொண்டு தோட்டத்திற்கு வர சொல்லியத்தின் பேரில் அங்கு சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான் ராஜி. அவன் மட்டுமின்றி மது வாங்கி தருவதாக வல்லரசு என்ற கூட்டாளியையும் கூட அழைத்து வந்த ராஜு உன்னை  திருமணம் செய்துகொள்வதாக இருந்தேன் ஆனால் நீ 15 வயது சிறுவர்களுடன் பழகியுள்ளாய் என சுட்டிக்காட்டி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி எல்லை மீறியுள்ளான். 

 

இதனைக்கேட்ட மாணவி  தன்னை ஏமாறிவிட்டதை உறவினர்களிடம் சொல்லிவிடுவேன் என கூற ராஜியும் அவனது கூட்டாளி வல்லரசும் சேர்ந்து மாணவியை கிணற்றில் தள்ளிவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்தசம்பவம்  கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.