ADVERTISEMENT
இதில் மனமுடைந்து போன மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையிலான குழு, அப்பள்ளிக்கு சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கர்ணன், அந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சென்று தலைமறைவானார்.
ADVERTISEMENT
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (01-04-24) செந்துறை பிரிவு ரோடு அருகே கர்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments