Skip to main content

சொத்துக்காக பெற்ற தந்தையே அடித்துக்கொலை... திண்டலில் பரபரப்பு!

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

police

 

ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 68 வயதான முதியவர் பழனிசாமி. விவசாயியான இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், 37 வயது ரவிக்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகள் பிரியதர்ஷினி திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்துவருகிறார். மகன் ரவிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரவிக்குமார் என்ஜினீயரிங் படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

 

ரவிக்குமார் அவரது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு தந்தை பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தந்தை மீது தொடர்ந்து ரவிக்குமார் கோபத்தில் இருந்திருக்கிறார். இந்தநிலையில் 1 ந் தேதி  இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தை பழனிசாமியிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறி சண்டை போட்டுள்ளார். இதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

 

இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிசாமியை பலமாக தாக்கியுள்ளார். இதில் பழனிசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரவிக்குமார் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தனது தாயை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாயர் ருக்குமணி தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்திருக்கிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ருக்குமணி கணவரை எழுப்பியுள்ளார். ஆனால் பழனிச்சாமி பேச்சு மூச்சில்லாமல் அப்படியே இறந்தது விட்டார்.

 

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு 2 ந் தேதி காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர்கள் விஜயா, சோமசுந்தரம் அகியோரும் உடனிருந்தனர்.மோப்பநாய் ஜெரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த செய்தி அக்கம்பக்கத்தில் பரவியதும் பழனிசாமி வீட்டு முன்பு ஏராளமானோர் திரண்டு விட்டனர். போலீசார் விரைந்து வந்து பிரேதப் பரிசோதனைக்காக பழனிசாமியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகன் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 1 ந் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பணத்துக்காக விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கொலை நடந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.