Skip to main content

விதி வந்தா எதுவும் நடந்துட்டு போகுது... எங்கள விடுங்கைய்யா... ஈரோட்டில் பொதுமக்கள் போராட்டம்!!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கரோனாவை விட கொடிய நோய் வறுமை என்பதை ஆட்சியாளர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்ற கோபம் மக்கள் மனதில் அனலாக கொதிக்கத் தொடங்கிவிட்டது. ஈரோடு மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டனர். அப்படியொரு சம்பவம்தான் இது.


ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டில் உள்ளது பெரிய அக்ரஹாரம் பூம்புகார் நகர். இங்கு  ஏழை எளிய கூலி தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இப்போது கரோனா தடுப்பு நடவடிக்கை  காரணமாக இந்தப் பகுதி மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள்ளவர்கள் வெளியே செல்லவோ, வெளியாட்கள் இங்கு உள்ளே வரவோ அனுமதி இல்லை. இந்த நிலையில் சென்ற ஒரு மாதமாக அவர்களிடமுள்ள நிதியை வைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

 

ERODE


தற்போது அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும் சிரமப்படும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் இன்றி தவிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இன்று அப்பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி பூம்புகார் நகர் வீதிக்கு வெளியே  திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள்.
 

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது,

''இங்கு யாருக்கோ ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாம் இதனால் இங்கு வந்த அதிகாரிகள் உங்க பகுதியே அபாயகரமானது, கரோனா பரவிவிட்டதுனு சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பு எங்க பகுதியை சீல் வைத்து நீங்க யாரும் வெளியே வரக்கூடாது. உங்களுக்கு தேவையானதையெல்லாம் வீடு தேடி கொண்டு வந்து கொடுப்போம்னு சொன்னாங்க. நாங்களும் பயந்துகிட்டு வீட்டிலேயே முடங்கி கெடந்தோம். ஆரம்பத்துல காய்கறி, உணவு பொருட்கள் கிடைத்ததை வாங்கினோம். அரசாங்கம் கொடுத்த ரேசன் அரிசி, ஆயிரம் ரூபா பணத்தோட சரி வேற எதுவுமே எங்களுக்கு கொடுக்கல, பச்ச குழந்தைகளுக்கு பால் வாங்கி கூட கொடுக்க வக்கில்ல, காசு, பணம் சுத்தமா இல்ல, நாங்க அன்றாடங்காய்ச்சிக, கூலி வேலைக்கு போனாத்தான் அந்தனைக்கு வீட்டுல அடுப்பு எரிக்க முடியும்.
 

 nakkheeran app



இப்ப கூலி வேலையுமில்லே, வெளியில எங்கும் போக்க கூடாதுனு மிரட்டி வெச்சுருக்காங்க. கையில வேற தீவிரவாதி மாதிரி பச்ச குத்தீட்டாங்க.. ஒன்னு நாங்க மூனு நேரமும் சாப்பிட வழிவகை செய்து கொடுங்க இல்லைனா, இந்த சிறையில இருந்து வெளியே விடுங்க வெளியில போய் எங்காவது கடன் வாங்கியோ அல்லது பிச்சை எடுத்தோ பொழச்சுக்றோம், எப்ப பாத்தாலும் கரோனா, கரோனானு சொல்லிச் சொல்லியே பயமுறுத்தறாங்க,

ஐயா, சாமிகளா கரோனா வந்து செத்தாலும் பரவாயில்லே எங்க புள்ளைக, குழந்தைக, நாங்க பசியால வறுமையால சாக முடியாது. நாங்க இந்த அரசாங்கத்துகிட்டே பிச்சை கேட்கலே... நாங்களெல்லாம் உழைச்சு வாழ்ந்தவங்க, இனியும் உழைச்சுத் தான் வாழ்வோம். உழைக்க விடுங்க,... விதி வந்தா சாவு வந்துட்டு போவுது... இப்படியெங்கல பரிதவிக்க வெச்சுட்டாங்களே...." என கண்ணீரும் கதறுலுமாக கூறினார்கள். 

மக்கள் போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து பெரிய அக்கரஹாரம் கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி உதவி அணையாளர் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் எல்லோரும் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து நிவாரணமும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் சில நாட்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனக்குமுறல் நியாயம் தான் சரிசெய்கிறோம் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள்  கலைந்து சென்றனர். எனினும் இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில்  சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.