Skip to main content

வங்கியை ஏமாற்ற திட்டம்... இளம்பெண் கணவனுடன் கைது!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020
incident in erode

 

ஈரோடு, புதிய ஆசிரியர் காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் கார்த்திக் 40 வயது. அவரது மனைவி 38 வயது ராதிகா. இவர் சென்ற மாதம் 13ஆம் தேதி ஈரோடு வில்லரசம்பட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கினார். பிறகு அந்த வங்கி மேலாளரை சந்தித்த ராதிகா இந்த வங்கியின் திண்டல் கிளையில் தான் கணக்கு வைத்திருப்பதாகவும் இப்போது புதிதாக மீண்டும் இங்கு ஒரு கணக்கு தொடங்கியிருப்பதாகவும் கூறிய அவர், மேலும் தன்னை ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மேலாளர் என  அறிமுகம் செய்து கொண்ட ராதிகா தனக்கு கார் வாங்க வங்கியில் லோன் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கியில் இருந்து சில ஆவணங்களை கேட்டுள்ளனர். அதன்படி ராதிகாவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை 6 மாத சம்பள கணக்கு விவரம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தப்பட்ட வருமானவரி விவரம் ஆகியவற்றை கொடுத்தார். மேலும், கோவையில் உள்ள ஒரு ஷோ ரூமிலிருந்து காருக்கான கொட்டேசன் வாங்கி வந்த அவர் அந்த வங்கி கிளையில் அதை கொடுத்தார்.

 

இதையடுத்து அந்த வங்கிக் கிளையில் இருந்து கோவையில் உள்ள கார் ஷோரூமுக்கு கடந்த 17ஆம் தேதி ரூபாய் 19 லட்சத்திற்கான வரைவோலை ராதிகாவிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து வங்கியிலிருந்து கோவையில் உள்ள அந்த கார் ஷோரூமை தொடர்புகொண்டு காருக்கான ஆர்.சி ஒரிஜினல் அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அப்போது கார் ஷோரூமில் இருந்து பேசிய நபர், ராதிகா தனது பெயரில் கார் வாங்க வில்லை. அவர் அவரது கணவர் கார்த்திக் பெயரில் கார் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது வங்கியில் கடன் பெற்ற விவரம் வாகனத்தின் பதிவின்போது குறிப்பிடப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

incident in erode

 

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகத்தினர் வரைவோலையின் நிலை குறித்து ஆய்வு செய்தபோது அந்த வரைவோலை பணமாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ராதிகா கொடுத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதைப்போல் ராதிகா போலி ஆவணங்கள் கொடுத்து ஏற்கனவே இரண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் அப்போது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் பிரியா ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ராதிகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோரை 29 ந் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இப்படியெல்லாம் முறைகேடு செய்து வங்கியை ஏமாற்ற திட்டம் போட்டிருக்கிறார்கள் இளம் பெண்ணும் அவரது கணவரும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.