Skip to main content

காதலியை தனிமையில் சந்திக்க காதலன் போட்ட பெட்ரோல் குண்டு- விசாரணையில் அதிர்ச்சி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் காதலியை தனிமையில் சந்திக்க காதலன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த அய்யம்பாளையம் பொட்டல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடிவந்த நிலையில் தகவலறிந்து வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை  அணைத்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த திடீர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சந்தேகப்படும்படி ஒரு இளைஞர் இருவர் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருந்த நபரான ராஜாங்கத்தை போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்  என்பதும், கொத்தனார் வேலை செய்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜங்கத்திடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

அதே அழகர் பொட்டல் குடியிருப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராஜாங்கம் காதலித்து வந்ததாகவும், அவரை சந்திக்க சென்றால் அப்பகுதி மக்கள் ஏதேனும் கேள்வி எழுப்புவார்கள் என பயம் கொண்ட ராஜாங்கம் அப்பகுதி மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்திக்க அந்த பகுதியில் உள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூட ராஜாங்கம் அவரது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

இளைஞர் ஏற்படுத்திய இந்த விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் காதலியை இடையூறின்றி சந்திக்க பெட்ரோல் குண்டு வீசி தீவிபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்த போலீசார் ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.