Skip to main content

15 வயது சிறுமியை  கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
incident in cuddalore

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  

 

அந்த சிறுமி  அரசூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதற்காக பண்ருட்டி பேருந்து நிலையம் செல்லும்போது அங்குள்ள பழக்கடையில் வேலை செய்யும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த  இருந்து தட்சினாமூர்த்தி (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். காதலிக்கும் போது அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டனர். அதன்படி சம்பவத்தன்று  தனது வீட்டுக்கு வருமாறு சிறுமியை தட்சிணாமூர்த்தியை அழைத்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி திருமண ஆசை காட்டி தன்னை தட்சிணாமூர்த்தி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.  அதனால் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி  நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சிறுமிக்கு 14 வயது தான் என  தெரிந்து கொண்டு, அவர்கள் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா  மற்றும் போலீசார் தட்சினாமூர்த்தியை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.