Advertisment

தொழுதூர் அருகே மகனை காப்பாற்ற குளத்துக்குள் குதித்த தாயும் உயிரிழப்பு!! 

INCIDENT IN CUDDALORE

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் - திவ்யா தம்பதியினர். சங்கரின் மனைவி திவ்யா தனது மகனான ஆர்யாவை அழைத்துக்கொண்டு தனது கிராமத்தில் அமைந்துள்ள குளத்திற்கு துணிகளைத் துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திவ்யாவின் மகனான 8 வயது சிறுவன் ஆர்யா எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கியுள்ளார்.

Advertisment

இதனைப் பார்த்த ஆரியாவின் தாயான திவ்யா தனது மகனை காப்பாற்றுவதற்காக அவரும் குளத்தில் மூழ்கி மகனைதேடி உள்ளார். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் குளத்தில் மூழ்கினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், ராமநத்தம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு திவ்யா மற்றும் அவரது மகனான ஆர்யாவை சடலமாக மீட்டனர். மகனை காப்பாற்ற முயன்ற தாயும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அவரது உறவினர்கள் கதறி அழும் காட்சி, காண்போரை கண்கலங்க செய்தது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police incident Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe