Advertisment

நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்த சோகம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட மணப்பெண்!

incident in cuddalore

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது அண்ணன் மகள் 25 வயது செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொறியியல் பட்டம் படித்துள்ளார். செல்வியின் தந்தை ராஜேந்திரன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன நிலையில், தனது சித்தப்பா ராமலிங்கம் பாதுகாப்பில் வளர்ந்து கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் படித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், செல்வி பொறியியல் பட்டம் படித்த கல்லூரியில், சங்கேஷ் என்ற மாணவனும் படித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதல் விவகாரம்இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவர, இரு குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி அவர்கள் சம்மதத்துடன் காதலர்கள்,இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காதல் மணமகன் சங்கேஷின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால், எவ்வளவோ முயன்றும்சிகிச்சை பலனின்றி சங்கேஷ் இறந்து போய்விட்டார்.

Advertisment

தான் காதலித்த காதலனே தனக்குக் கணவனாக வரப்போகிறார் என்றசந்தோஷத்தில் இருந்த செல்விக்கு, சங்கேஷ் மரணம் பேரிடியாக விழுந்தது. இதனால், மனமுடைந்த செல்வி, சில நாட்களில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் விஷம் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வியும் இறந்து போய்விட்டார். இதுகுறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதலித்த காதலர்கள் கணவன் மனைவியாக ஆகப்போகும் நேரத்தில்மணமகள், மணமகன் இருவரும் இறந்துபோன சம்பவம், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe