Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 63 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆ.அன்பழகன். இவருக்கு 63 வயதாகிறது. இதே ஊரைச் சேர்ந்த, இவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது சிறுமி உள்ளார்.  இந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதுடன்,  கை கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையிலும்,  வாய்ப் பேச இயலாத நிலையிலும்  உள்ளார்.

 

incident in cuddalore

 

கடந்த 03.07.2018 அன்று இந்த 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனது தம்பிகள் இருவருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் அந்தச் சிறுவர்களிடம் 'உங்க அக்காவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். நீங்கள் வெளியே போய் விளையாடுங்கள்' என்று வெளியே அனுப்பிவிட்டு, அதன்பிறகு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி சத்தம் எழுப்பவே அவரது துப்பட்டாவை வாயில் வைத்து அழுத்தியுள்ளார்.  ஆனாலும் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவர்கள் கத்தவே அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து அன்பழகனை அடித்து விரட்டினர்.

இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் கலாசெல்வி பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த  63 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.