Skip to main content

கடலூர் வாலிபர் ஆந்திராவுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020
INCIDENT IN CUDDALORE

 

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த அருள்மொழி என்பவரது மகன் வினோத்குமார் (24). இவர் சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வினோத்குமார் கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்த சூழலில் கடந்த 16-ஆம் தேதி வினோத்குமார் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாக கூறி வினோத்குமாரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் வினோத்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் சந்தேகமடைந்த வினோத்குமாரின் தந்தை அருள்மொழி  இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றதாக 16-ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 19-ஆம் தேதி கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் எழில்தாசன்  விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதி  போலீசார் நேற்று காலை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியிலுள்ள ராமாபுரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் கிடந்ததாகவும், விசாரணையில் அவர் வினோத்குமார் என்பதும் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.  அதையடுத்து வினோத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரில் பார்வையிட்டு இறந்தது வினோத்குமார் தான் என உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் வினோத்குமாரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள வாலிபர் வினோத்குமார் தான் என உறுதி செய்வதற்காக ஆந்திர போலீசாருடன் அனுப்பி வைத்தனர். இன்று சடலத்தை உறுதிசெய்யும் வினோத்குமாரின் பெற்றோர்கள் அவரது சடலத்தை அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிகிறது.

இதுகுறித்து இரு மாநில, இரு காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வேலை பார்த்த கடலூர் வாலிபர் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.