Skip to main content

கார் வியாபாரத்தில் 12 லட்சம் மோசடி! ஒருவர் கைது... மற்றொருவருக்கு வலைவீச்சு!  

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in cuddalore

 

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பரக்கத் தெருவில் வசிக்கும் முகமதுசாதிக் என்பவரது மகன் முகமது பாருக்(46) என்பவர் கடந்த 22.05.2020 அன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார்.  அந்த புகாரில், ' நான் 18 ஆண்டுகள் குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து விட்டு ஊர் வந்தேன். என்னிடம் எங்கள் ஊர் பெருமாள் தெருவை சேர்ந்த சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் மகன் முகமது ஆஷிக் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை சந்தித்து தானும், பாண்டிச்சேரி சண்முகாபுரம் சோனியா காந்தி நகரை சேர்ந்த தண்டபாணி மகன் அருண்பிரசாத் என்பவரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாகவும் , அதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், அவர்களுடன் இணைந்து தொழில் செய்தால் எனக்கு 50% சதவீதம் லாபம் கொடுப்பதாகவும் கூறி என்னை 12,22,000 (பன்னிரெண்டு லட்சத்து இருபத்திரண்டாயிரம்) முதலீடு செய்ய வைத்து, அதன் மூலம் முகமது ஆஷிக் 9 கார்களை வாங்கி என்னுடைய வீட்டில் விட்டார்.

பின்பு முகமது ஆஷிக் மற்றும் அருண்பிரசாத் ஆகியோர் கார்களை பாண்டியில் வைத்து விற்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்று கூறி 9 கார்களையும் பாண்டிச்சேரி எடுத்துச் சென்று கார்களை விற்றுவிட்டு பணத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். நான் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

 

incident in cuddalore


அந்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்பேரிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  கணகேசன் மேற்பார்வையிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி(பொறுப்பு) பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று (18.9.2020) மேல்பட்டாம்பாக்கம் பெருமாள்கோவில் தெருவிலிருந்த முகமது ஆஷிக்கை அவரது வீட்டில் வைத்து உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், விக்ரமன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணி, தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண்பிரசாத்தை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.