Skip to main content

ஒருதலைக் காதல் டார்ச்சர்!  மாணவி தீக்குளித்து தற்கொலை!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி - செண்பகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர்.  இப்பெண்கள் இருவரும் திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இவர்களின் இரண்டாவது பெண்ணான திவ்யதர்ஷினி கல்லூரியில் படித்து வரும் நிலையில்,  அதே  கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தொடர்ச்சியாக திவ்யதர்ஷினியை பின் தொடர்ந்து,  காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு   உறவுமுறையில் நாம் இருவரும்  அண்ணன் தங்கை என்றும், காதலிக்க முடியாது என்றும் திவ்யதர்ஷினி மணிமாறனிடம்  பலமுறை எடுத்து கூறி மறுத்துள்ளார்.  

 

incident in cuddalore


இந்நிலையில்  மணிமாறன் நேற்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்றும்,  உனது பெயரை கையில் பச்சை குத்திக்க போறேன் என்றும்,  கைகளில் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும்  மிரட்டியுள்ளார்.  இதனால் மனமுடைந்த திவ்யதர்ஷினி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.  இது பற்றி எவ்வித கவலையும் அடைய வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று மனதை திடப்படுத்தியுள்ளனர் குடும்பத்தினர்.  

 

incident in cuddalore


அதேசமயம்  இன்று காலை கல்லூரி செல்வதற்கு போதிய பணம் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார் திவ்யதர்ஷினி. அப்போது வீட்டைவிட்டு பெற்றோர்கள் வெளியே சென்றதும் மிகுந்த மனவேதனையில் இருந்த திவ்யதர்ஷினி வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து உடல் தீக்காயங்களுடன் இருந்த திவ்யதர்ஷினியை  மீட்டு,  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று (12.12.2019) இரவு திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்று வளர்த்த மகள் பாதியிலேயே தன் வாழ்வை முடித்து கொண்டதை நினைத்து 'கல்லூரிக்கு செல்லும்போது அக்கம்பக்கத்தினரிடம், 20 , 30 ரூபாய் பிச்சை எடுத்து பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதாகவும், வேகாத வெயிலில் கஷ்டப்பட்டாலும் கல்லூரிக்கு செல்லும் மகள்களுக்கு நல்ல சாப்பாடு  சமைத்து அனுப்பும் போதும், தனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள் என்று பலவித கனவுகள்  இருந்த நிலையில் காதல் என்ற பெயரால் தன் மகளை வேதனை அடைய செய்து தற்கொலைக்கு  கொண்டு சென்றவனை தண்டிக்க வேண்டும் என்றும், தன் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர்கள் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குபதிந்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.