incident in chennai

Advertisment

சென்னைசூளைமேட்டில், வீட்டுநாற்காலியில் இருந்து கீழேவிழுந்தடிவியால்2 வயது பெண் குழந்தை இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அலமாரியில் ஏறிய பூனை கீழே குதித்த பொழுது2 அடி சிறிய நாற்காலி மீது இருந்த டிவி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்தது.

டிவி விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அண்மையில் இதே சென்னையில் அலமாரியில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த செல்ஃபோனை எடுக்கச் சென்ற குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவமும்,அதேபோல் வாணியம்பாடியில் வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தைஉயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தநிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.