Skip to main content

தம்பி மகளை  சீரழித்த கொடூரன்! இப்படியும் சில மனித மிருகங்கள்

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

உடன் பிறந்த தம்பியின் மகளை முந்திரித்தோப்பில் வைத்து ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்து  சீரழித்துள்ளார் அதிமுக பிரமுகர் ஒருவர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல் கொலை மிரட்டல் விடுத்து, இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். சொந்த பெரியப்பாவால், தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் கர்ப்பமாகி உள்ளது தெரியவந்துள்ளது.

மகள் உறவுமுறை கொண்ட பெண்ணை சீரழித்த செல்வராஜ். 65 வயதான இவர், ஆண்டிமடம் ஒன்றிய பொருளாளராக இருந்து வருகிறார். 4 முறை திருமணம் செய்துள்ள இந்த நபர் மீது, ஏற்கனவே, பாலியல் புகார்களும் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முந்திரி கொட்டைகளை சேகரிக்க, தோப்புக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

incident in ariyalur

 


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம்- பவானி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியின் இரண்டாவது மகள் நவநாயகிக்கும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது), சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

குடும்ப பிரச்சனை காரணமாக, கணவன்-மனைவிக்கிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்துள்ளார். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான நவநாயகி, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, கணவரை பிரிந்து தனது 6 வயது மகனுடன் தாய் வீட்டிற்கு வந்து, அங்கேயே வசித்து வந்துள்ளார். நவநாயகி கூலி வேலைக்கு செல்வதும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் கொண்டு கொடுக்கும் வேலைகள் செய்து வந்துள்ளார். அவ்வப்போது, தனது பெரியப்பாவின் முந்திரி தோப்புகளுக்கு சென்று முந்திரி கொட்டைகளையும் சேகரித்து வந்துள்ளார் நவநாயகி.

அப்படி ஒருமுறை நவநாயகி முந்திரி தோப்புக்கு சென்றபோது சொந்த பெரியப்பாவான செல்வராஜின் கண்ணில் பட்டதும், தனது தம்பி மகள் என்று பார்க்காமல் அந்த அப்பாவிப் பெண்ணை. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த ஜீவனை, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்த  காமவெறி மிருகம், அதோடு விடாமல் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியும், அந்த பெண்ணின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மிருகம் , அந்த பெண்ணை பல முறை விடாமல் சீரழித்துள்ளது. இதனால், நவநாயகிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சில தினங்களாக சோர்வாக இருந்ததுடன், அடிக்கடி வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர், நவநாயகியை ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

நவநாயகியிடம் உறவினர்கள் விசாரித்தபோதுதான், தனக்கு பெரியப்பாவால் நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார் அந்த பெண். இதையடுத்து, நவநாயகியின் தாயார் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அதிமுக ஒன்றிய பொருளாளர் செல்வராஜைபோலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.