வறண்ட குளத்திலிருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!! அறந்தாங்கியில் பரபரப்பு!!

incident in aranthangi

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று காணாமல் போன சிறுமி இன்று வீட்டின் அருகே உள்ள குளத்தில்சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஒரு கிராமத்தில் நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயதுசிறுமி, இரவு ஏழு மணி ஆன நிலையிலும்வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் தேடிவந்தனர். இதுதொடர்பாகஅருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.போலீசாரும், பெற்றோரும் இன்று மாலை 4 மணிவரை தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் அருகில் இருந்த வறண்டகுளத்தின் மீது சிறுமியின் உடல் கிடப்பதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசார் அங்கு சென்று உடலை கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் வறண்டுபோன குளத்தில் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aranthangi incident pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe