Skip to main content

அரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே தகாத உறவு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்! 

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

அரசுப் பள்ளி வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸப் குழுவில் பதிவிட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி உத்தமபாளையம் அருகே மசாமி நாயக்கன்பட்டியில், வாய்க்கால்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் லீனா புஷ்பராணி. இப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஜான் சத்தியபாபு இருவரும் திருமணமானவர்கள்.

 

Inappropriate relationship in the classroom of a government school… Teachers suspended!


இந்நிலையில் ஜான் சத்தியபாபு தான் வசிக்கும் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது லீனா புஷ்பராணிக்கும் ஜான் சத்தியபாபுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்து அடிக்கடி வெளியில் செல்வதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே சில மாணவர்களே பயிலும் துவக்கப்பள்ளியில் காலியாக இருக்கும் வகுப்பறையில் பலமுறை இருவரும் தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது தனிமையில் இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்திருந்த ஜான் சத்தியபாபு அந்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் தவறுதலாக தேனி மாவட்ட ஆசிரியர்கள் குழுவில் பதிவிட்டுள்ளார். இதனால், இருவருக்குமான தவறான தொடர்பு வெளி உலகிற்கு தெரியவந்தது. இதனை அறிந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகம், ஜான் சத்தியபாபுவை சஸ்பெண்டு செய்தது. அதனை தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை லீனா புஷ்பராணியும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இது சம்பந்தமாக தேனி மாவட்ம முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தேவியிடம் கேட்டபோது... ஜான் சத்தியபாபு தனியார் பள்ளியில் பணியாற்றியதால் உடனே சஸ்பெண்டு செய்யப்பட்டார். லீனா புஷ்பராணி அரசுப் பள்ளி ஆசிரியை என்பதால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உண்மை தன்மை அறிந்த பின்னரே சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். வெளியான வீடியோவில் இருக்கும் புகைப்படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை செய்ய இருக்கிறோம் என்றார்.

இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.