Skip to main content

மூத்த வயதுப் பெண்ணுடன் முறையற்ற தொடர்பு... கயிற்றால் கட்டிவைத்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

 Improper contact with an older woman ... Video footage of her being tied up with a rope and shocked!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  மேல்மலை கிராமமான கூக்கல் என்ற கிராமத்தில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு உசிலம்பட்டியை சேர்ந்த தன்ராஜ் (வயது 32) என்ற இளைஞர் நிலப்பரப்பு ஒன்றை விலைகொடுத்து வாங்கி அதில் தங்கும் விடுதி கட்டி அதனை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த தங்கும் விடுதிக்கு பாலம்மாள் என்ற 50 வயது பெண் வேலைக்கு வந்துள்ளார். கணவனை இழந்த பாலம்மாளுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இளைஞன் தன்ராஜ்க்கும் மூத்த வயதுடைய பாலம்மாளுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று வருடமாக இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

police

 

முறையற்ற தொடர்பை கைவிடுமாறு பெண்ணின் உறவினர்கள் இளைஞன் தன்ராஜை எச்சரித்து வந்தனர். இதுதொடர்பாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கிராமத்தில் ஊர் திருவிழா நடைபெற்ற நிலையில் கூக்கல் வயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பாலம்மாளின் தம்பி பூவேந்திரன் மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தன்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கை கால்களை கயிற்றால் கட்டி கல்லால் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.