Skip to main content

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... செங்கோட்டையனுக்கு ஒர வஞ்சனையா...?

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் எங்களுக்கும் லேப்பாப் வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஈரோட்டை பரபரப்பாக்குகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதன் படி பிளஸ் 2 மாணவர்களுடன் பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

protest


இந்நிலையில் கடந்த 2017-18  ஆண்டு படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கூறி மாணவ மாணவிகள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இந்த லேப்டாப்  விஷயம் வீரியமாக மாணவர்கள் போராட்டமாக வெடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலவச லேப்டாப் கொடுக்க வந்த ஈரோடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு மற்றும் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை முற்றுகையிட்டு போராடினார்கள் இதில் மாணவ, மாணவியர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அதன் பிறகு பீதியான எம்.எல்.ஏ.க்கள் எந்த பள்ளிக்கும் லேப்டாப் கொடுக்க செல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இலவச லேப்-டாப்கள்  வழங்க கோரி 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டு வந்தனர்.

இதனால் நூற்றுக்கணக்கான  போலீசார குவிக்கப்பட்டிருந்தனர்.  மாணவர்கள் மனு கொடுக்க ஐந்து பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் அனுமதித்தனர் அந்த ஐந்து மாணவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் சென்று மனு கொடுத்தனர்.  அப்போது எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உங்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு விடும்  என்று கூறி அதற்கான அரசானை  நகலை மாணவரிடம் காண்பித்தனர். இதனை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட மாணவர்கள்   கலெக்டர் அலுவலகத்திலிந்து வெளியேற தொடங்கினார்கள்.   

protest

 

மனு கொடுக்க வந்த மாணவர்கள் கூறும்போது,


"நாங்கள்  கடந்த 2017-18    ஆண்டில் பிளஸ்2 முடித்தோம்.  எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப்கள்இன்னும் வழங்கப்படவில்லை.  ஆனால் எங்களுக்கு அடுத்த வருடம் படித்த மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கிவிட்டனர் இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை.  நாங்கள் தற்போது கணினி பாடம் சம்பந்தமாக படித்து வருகிறோம் லேப்டாப் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் லேப்டாப்  கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அரசு எங்களை வஞ்சிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் மாவட்டத்தில் எல்லோருக்கும் கொடுத்து விட்டனர் எங்களுக்கு மட்டும் இன்னும் இரண்டு மாதம் பொறுங்க என தள்ளி போடுகிறார்கள். முதல்வர் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாவட்டத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்"  என்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.