Skip to main content

குட்கா கிடங்கில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின! உணவுப்பாதுகாப்புத்துறை விசாரணை!!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

சேலத்தில், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள உணவுப்பாதுகாப்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


சேலம் செவ்வாய்ப்பேட்டையில் தொழில் அதிபர்கள் இரண்டு பேர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒரு கிடங்கில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 19) அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். 
 

Important documents trapped from Kutka warehouse! Food Security officers Investigation


ஆனால் சோதனையின்போது புகையிலைப் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவசர அவசரமாக புகையிலை பொருள்களை வேறிடத்திற்கு மாற்றி உள்ளனர். என்றாலும், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளோம். வணிகவரித்துறை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து இப்பணிகளைச் செய்து வருகிறோம். 


செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இரண்டு பேர் குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை நீண்ட காலமாகவே பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்து, பல மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புகின்றனர். 


இவ்விருவரின் மீதும் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. இவர்களுடைய கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. புகையிலை பொருள்களை பதுக்கி வைத்துள்ள இடம் குறித்தும் விசாரித்து வருகின்றோம்,'' என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.