Skip to main content

குட்கா கிடங்கில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின! உணவுப்பாதுகாப்புத்துறை விசாரணை!!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

சேலத்தில், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள உணவுப்பாதுகாப்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


சேலம் செவ்வாய்ப்பேட்டையில் தொழில் அதிபர்கள் இரண்டு பேர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒரு கிடங்கில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 19) அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். 
 

Important documents trapped from Kutka warehouse! Food Security officers Investigation


ஆனால் சோதனையின்போது புகையிலைப் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவசர அவசரமாக புகையிலை பொருள்களை வேறிடத்திற்கு மாற்றி உள்ளனர். என்றாலும், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளோம். வணிகவரித்துறை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து இப்பணிகளைச் செய்து வருகிறோம். 


செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இரண்டு பேர் குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை நீண்ட காலமாகவே பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்து, பல மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புகின்றனர். 


இவ்விருவரின் மீதும் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. இவர்களுடைய கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. புகையிலை பொருள்களை பதுக்கி வைத்துள்ள இடம் குறித்தும் விசாரித்து வருகின்றோம்,'' என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.