Advertisment

விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்பு - நித்யானந்தா!

ுப

Advertisment

விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாக உள்ள பிரபல சாமியார் நித்யானந்தா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளார். தான் கைலாசா என்றை நாட்டை உருவாக்கி உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்தார். இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளிவர இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

nithyananda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe