Skip to main content

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் முகமது இர்பான், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில செவ்வாய்க்கிழமை (அக். 1) சரணடைந்தார்.


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக்கல்லூரிகளில் முறைகேடாக சேர்ந்ததாக முதன்முதலில் உதித் சூர்யா என்ற மாணவர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களின் மூலச்சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள், நீட் தேர்வு நுழைவுச்சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் மேலும் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. 

Impersonation of the Need Exam:   Dharmapuri Government Medical College Student surrender in salem court


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது, முகமது இர்பான் என்ற முதலாம் ஆண்டு மாணவர் மட்டும் சான்றிதழ் சரிப்பார்ப்பு நாளன்று ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு அடுத்தடுத்து சில நாள்கள் அவகாசம் அளித்தும், சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் சென்றார். இதனால், அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. ஆவணங்களை ஆய்வு செய்ததில், மாணவர் முகமது இர்பானும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த மோசடியில் முகமது இர்பானின் தந்தை முகமது ஷபிக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் தேனி மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர், இர்பானையும், அவருடைய தந்தையையும் கைது செய்ய விரைந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசித்தும் வரும் முகமது ஷபியை செப். 29ம் தேதி கைது செய்தனர். ஆனால் இர்பான் தலைமறைவாகிவிட்டார். 

Impersonation of the Need Exam:   Dharmapuri Government Medical College Student surrender in salem court


இதற்கிடையே, அவர் மொரீஷியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், சேலத்தில் வைத்து இர்பான் கைது செய்யப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின. என்றாலும் சிபிசிஐடி தரப்போ, அவரை தேடி வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில், முகமது இர்பான், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சேலம் மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். 


வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சிவா, முகமது இர்பானை வரும் 9ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இர்பான் சரணடைந்த தகவல் அறிந்து, சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். மாணவனிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால், இதற்கு இர்பான் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபணை தெரிவித்ததால் சிபிசிஐடி காவல்துறையினர் ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதனால் நீதிமன்ற அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், முகமது இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.