Skip to main content

‘நான் மரணிக்கிறேன்.. எல்லாம் முடிந்தது’ மாணவி தற்கொலை! 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

‘I’m dying .. it’s all over’ Student passed away

 

சென்னை, பெரம்பூர் அருகில் உள்ள அயனாவரம், பி.இ.கோயில் தெருவில் வசித்து வருபவர் கமல்ராஜ். இவரது மனைவி தாட்சாயிணி, இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கமல்ராஜ் வில்லிவாக்கம் பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கமல்ராஜின் மனைவி தாட்சாயிணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அதனையடுத்து கமல்ராஜ் தன் பிள்ளைகளுடன் தனியே வாழ்ந்துவருகிறார். சிறுவர்கள் இருவரும் அயனாவரத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 

 

வழக்கம்போல், நேற்று தனது கடைக்கு கிளம்பி சென்றுள்ளார். குழந்தைகளும், காலை பள்ளிக்கு சென்றுள்ளனர். பிறகு மாலை வீடு திரும்பியதும், கமல்ராஜின் மகன் மட்டும் டியூஷனுக்கு கிளம்பியுள்ளார். அப்போது தனது சகோதரியை அழைத்தபோது, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், வேலை முடிந்து கமல்ராஜ் வீடு திரும்பியபோது, அவரது மகள் படுக்கை அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாணவியை மீட்டு பரிசோதனை செய்தபோது, அவர் இறந்தது தெரிந்தது.


தகவலறிந்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் அருகில் கிடந்த பாட புத்தகத்தை எடுத்து பார்த்தபோது, அதில், ‘நாண் மரணிக்கிறேன். எல்லாம் முடிந்தது’ (‘i am going to death. it is all over finish’) என்றும், அதன் கீழ், கண்ணீர் அஞ்சலி எனவும் எழுதி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ‘‘தாய் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்