Advertisment

பருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை

paruthipattu

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், கரோனாதடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதலே ஊரடங்கு என்பது பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தற்போது வரை தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால்நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே ஆவடி பருத்திப்பட்டு பகுதி சாலைகளில் 24 மணி நேரமும் தாராளமாக மது விற்பனை சட்ட விரோதமாக நடந்து வந்திருக்கிறதுதகவல் தற்போது வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை எந்த ஒரு தடையுமின்றி இந்த பகுதியில் மது விற்பனை திறந்தவெளியில்நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சாலை பகுதியிலேயே 24 மணி நேரமும்மதுபானம் விற்பனை நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruvallur avadi corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe