Skip to main content

ஏற்காட்டில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டி அழிப்பு; வனத்துறை அலுவலர் பணியிடைநீக்கம்!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

Illegal cutting of trees in Yercaud; Forest department officer dismissal!

 

ஏற்காடு வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி அழிக்க உடந்தையாக இருந்த வனத்துறை அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம், சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு வனப்பகுதியில் அகரம் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து குப்பனூர் முதல் ஏற்காடு முதன்மைச் சாலை வரை செல்வதற்கு வசதியாக 2.50 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதிக்குள் புதிய சாலை அமைக்க அகரம் மலைக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். 


இந்த சாலை அமைக்க அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், மலைக்கிராம மக்கள் அறியாமையில், சாலை அமைய உள்ள பகுதிகளில் இருந்த மரங்களை வெற்றி அகற்றியுள்ளனர். இதற்கு வனத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில், வனத்துறை அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம், உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். 


முதல்கட்ட விசாரணையில், மலைக்கிராம மக்கள் சட்ட விரோதமாக வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்றதும், அதற்காக அனுமதியின்றி 200 மரங்களை வெட்டி வீழ்த்தி இருப்பதும் தெரியவந்தது. வனக்காப்பாளர் குமார் என்பவர், மலைக்கிராம மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மரங்களை வெட்ட அனுமதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், வனச்சரகர் பரசுராமமூர்த்தி, வனவர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மரங்கள் வெட்டப்படுவது தெரிந்து இருந்தும் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 


இந்த சம்பவம் வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.