பரோல் கிடைத்ததையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி பரோலில் வெளியே வந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனது சகோதருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை சந்திக்க பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார் இளவரசி. இதையடுத்து 15 நாள் பரோலில் அவர் வெளியே வந்துள்ளார்.