Skip to main content

“ஐ.ஐ.டி. என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவே இருக்கிறது”-செல்வப்பெருந்தகை!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

 

சென்னை ஐ.ஐ.டி. நிறுவன படுகொலை செய்யப்பட்ட மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி வேண்டி, வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தலைமை தாங்கினார். இதில்  அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்  பல்வேறு அமைப்பினர் கண்டன உரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசியதாவது, “மன உளைச்சல் ஏற்படுத்தியதால் பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி நிறுவன படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். அதை தொடர்ந்து ஐ.ஐ.டியில் நடந்த பல படுகொலைகள் வெளியே வந்தது நாம் அறிந்த விஷயம் தான். இந்த விஷயத்தில் நீதி வேண்டும் என்று அன்றே தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடிய காரணத்தால் இன்று கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் முழு முழுக்க அப்பட்டமான பொய் சிபிஐயால் புனையப்பட்டிருக்கிறது என்பது நாமெல்லாம் தெரிஞ்ச ஒன்று தான். சுதர்ஷன பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் தான் எனது மரணத்திற்கு காரணம் என சூசைட் நோட்ஸ் இருந்தும் இன்று பாத்திமாவிற்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.

 

இதே போன்று சென்னை ஐ.ஐ.டியில் 2019ல் மட்டும் 6 மாணவர்கள் இறந்திருக்காங்க. இதுவரையில் பத்து வருடத்தில் 14 மாணவர்கள் இறந்திருக்காங்க. ஐ.ஐ.டி என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவும், உயர் ஜாதியினர் ஆதிக்கம் இருக்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது என்பது சிபிஐ அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. முழுக்க முழுக்க அப்பட்டமாக பொய் சொல்லப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதி கிடைக்கிற வரைக்கும் மிகப் பெரிய ஒரு மக்கள் மாணவர்கள் திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் சொன்னது போல இன்று இங்கு தொடங்கியிருக்கிறோம். அதனால் பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடரும். அதே போல ஐ.ஐ.டியில் எத்தனை மாணவர்கள் இறந்தார்களோ அத்தனை மாணவர்களின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிகொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.