Skip to main content

 “பிஎச்டி முடிக்க வேண்டும் என்றால், என் வீட்டு வேலையை செய்ய வேண்டும்” - பேராசிரியர் மிரட்டல்!!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

"If you want to complete my PhD, you have to do my home works" - Professor Intimidation !!

 

வேதியல் துறை ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் ஜீவா என்பவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருச்சியில் தங்கி தன்னுடைய பிஎச்டி படிப்பை படித்து வரும் அவர் நேற்று (11.02.2021) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

அந்த மாணவரின் போராட்டம் குறித்து விசாரித்தபோது, அவர் நன்றாக படிப்பவர் என்பதும், தேசிய அளவிலான தேர்வுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் கேட் தேர்வில் அகில இந்திய அளவில் 76வது இடம் பிடித்தவர், நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. பாரதிதாசன் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி பயின்றுள்ளார்.

 

அவர் நல்ல ஒரு சிறந்த மாணவர் என்பதை தெரிந்துகொண்ட பேராசிரியர் தியாகராஜன், ஆராய்ச்சி படிப்பை தன்னிடம் படிக்குமாறு வலியுறுத்திய நிலையில், அந்த மாணவரும் அவரிடமே தன்னுடைய பிஎச்டி என்று சொல்லக் கூடிய ஆராய்ச்சிப் படிப்பை படிக்கத் துவங்கியுள்ளார். ஆராய்ச்சி படிப்பை துவங்கிய சில மாதங்களிலேயே தன்னுடைய வீட்டிற்குத் தேவையான சொந்தப் பணிகளைச் செய்வதற்கு அவரை பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் பேராசிரியர் என்பதால் அவர் உதவி செய்ததாக கூறியவர், அதுவே நாளுக்கு நாள் பழக்கமாகி தொடர்ந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தன்னை ஆராய்ச்சி படிப்பை விட்டு நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

"If you want to complete my PhD, you have to do my home works" - Professor Intimidation !!

 

அதேபோல ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு தேவையான மாதாந்திர தொகையை இதுவரை தனக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அதற்கான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு  விசாரணையும் நடை பெற்றது, ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

 

எனவே பேராசிரியர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேதியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஜீவா, பல்கலைக்கழகத்தில் உள்ள தன்னுடைய துறை முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.