தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனபோக்குவரத்துஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தால் சம்மந்தப்பட்டசரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் வாகன உரிமையாளர், வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.