ADVERTISEMENT

“பிழைக்கத் தெரிஞ்ச எம்.எல்.ஏ. எல்லாம் கேட்டு வாங்கிக்கோங்கப்பா” - அமைச்சர் கே.என்.நேரு

01:22 PM Nov 25, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திருச்சியில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளைத் துவக்கியும், முடிவடைந்திருந்த பணிகளைத் திறந்தும் வைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நமக்கு ஆரம்ப சுகாதார நிலையம் திருச்சி மேற்கு தொகுதிக்கு ஒன்று கொடுத்துள்ளார்கள். உப்பிலியாபுரத்திற்கு ஒன்று கொடுத்துள்ளார்கள். அதனால் பிழைக்கத் தெரிந்த எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் உங்கள் தொகுதிக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வந்து பார்த்துப் பேசவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இத்துறையை நன்றாகக் கையாண்டு வருகிறார். திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றும், ஆயுர்வேதக் கல்லூரி வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT