Skip to main content

'கள்ளத்துப்பாக்கி வைத்து இருந்தால் குண்டர் சட்டம் பாயும்!'- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

'If you keep a fake gun, the law of thugs will flow!' - District Superintendent of Police warns!

 

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி சேர்ந்த நாகேஷ் குமாரை மீன்பிடிப்பு குத்தகை பிரச்சனை காரணமாக,  துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இது சம்பந்தமாக மேற்கு மரிய நகரத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான பிரகாஷ் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.டி.எஸ்.பி.சந்திரன் மற்றும் வெள்ளைச்சாமி தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.க்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30 காவல்துறையினர் கொண்ட இரண்டு தனிப்படை அமைத்து சிறுமலை, வாழக்காபட்டி, நத்தம், சாணார்பட்டி, கண்ணார்பட்டி, நரசிங்கபுரம் உள்பட சில பகுதிகளில் இருக்கும் மலை அடிவார கிராமங்களில் அதிரடி ஆய்வு செய்தனர்.

 

அப்போது, தவசிமடை, கொரசின்னம்பட்டியில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து, அவரிடமிருந்து 5 நாட்டு துப்பாக்கிகள், கரி மருந்து மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

'If you keep a fake gun, the law of thugs will flow!' - District Superintendent of Police warns!

இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "கடந்த காலங்களில் சிறுமலை மலைப் பகுதியில் கள்ளத் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பதாக தெரிய வந்ததின் பேரில் மலைக் கிராமம் பகுதிகள் தண்டோரா அடிக்கப்பட்டு கள்ளத் துப்பாக்கி இருந்தால் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மலையில் ஆங்காங்கே போட்டு விட்டு சென்றனர். 

 

அது போல் தற்பொழுது கள்ளத்துப்பாக்கிகள் யார் வைத்திருந்தாலும், அதை உடனடியாக ஏதாவது ஒரு இடத்தில் போட்டு விடுங்கள். அப்படி மீறி கள்ளத்துப்பாக்கிப் பதுக்கி வைத்து இருந்ததை நாங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவர்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது